×

தூத்துக்குடி அம்மா உணவகத்தில் மேயர் ஜெகன் திடீர் ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி அம்மா உணவகங்களில் விரைவாக உணவுகள் தீர்ந்து விடுவது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி திடீர் ஆய்வு நடத்தினார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. அதில் ஏழை எளியவர்களுக்கு குறைந்த விலையில் நல்ல தரமான உணவு தயார் செய்து வழங்கப்பட்டு வரும் நிலையில் சில பகுதிகளில் பொதுமக்கள் எண்ணிக்கை அதிக அளவில் வருவதால் விரைவாக உணவு வகைகள் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்று பல்வேறு தரப்பிலிருந்து மேயருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மேயர் ஜெகன்பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார் திடீரென ஆய்வு மேற்கொண்டு அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் தினமும் தயார் செய்யப்படும் உணவுகள் குறித்து கேட்டறிந்து தரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா என்பதை சாப்பிட்டு ஆய்வு செய்தனர். உதவி செயற்பொறியாளர் சரவணன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் ஜோஸ்பர், பிரபாகர் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடி அம்மா உணவகத்தில் மேயர் ஜெகன் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Mayor ,Jegan ,Thoothukudi ,Jegan Periyasamy ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி பிரையண்ட்நகர் பகுதியில் புதிய சாலை வசதிகள்