மதுரை: நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் நாளை முதல் புகார் அளிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். மதுரை புதுநத்தத்தில் உள்ள காவல் ஆயுதப்படை லைமுறை மைதானத்தில் நடைபெறும் மனு மேளாவில் புகார் அளிக்கலாம் என்றும் பொதுமக்களுக்கு சட்டரீதியாக புகார் அளிக்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிவித்துள்ளது.
The post நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் நாளை முதல் புகார் அளிக்கலாம்: பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை appeared first on Dinakaran.