×

நெல்லை கூடங்குளம் போராட்டம் தொடர்பான வழக்கில் இருந்து சுப.உதயகுமார் விடுதலை..!!

நெல்லை: நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் இருந்து சுப.உதயகுமார் விடுதலை செய்யப்பட்டார். வழக்கில் இருந்து சுப உதயகுமார், புஷ்பராயன், சேசுராஜன் ஆகியோரை வள்ளியூர் நீதிமன்றம் விடுதலை செய்தது. கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டம் தொடர்பாக அதிமுக ஆட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 349 வழக்குகளில் 295 வழக்குகள் அரசால் ரத்து செய்யப்பட்டன. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் 19 பேருக்கு தண்டனை உறுதியானது.

The post நெல்லை கூடங்குளம் போராட்டம் தொடர்பான வழக்கில் இருந்து சுப.உதயகுமார் விடுதலை..!! appeared first on Dinakaran.

Tags : Suba. Udayakumar ,Nellai Kudankulam protest ,Nellai ,Nellai Kudankulam ,nuclear power plant ,Suba Udayakumar ,Nellie Kudankulam ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...