×

தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நீடிப்பாரா என்பதே சந்தேகம் தான்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு

சென்னை: பாதயாத்திரை போகின்ற வரையில் தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவராக நீடிப்பாரா என்பதே சந்தேகம் தான் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் நினைவுநாளையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப் படத்திற்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எம்.எல்.ஏ., தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன். கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச செயலாளார் ரங்கபாஷ்யம், கலைப்பிரிவு மாநில தலைவர் சந்திரசேகரன், மாவட்டத் தலைவர் சிவா ராஜசேகரன், பாலமுருகன், செயற்குழ உறுப்பினர் சுமதி அன்பரசு, வழக்கறிஞர் சுதா, அகரம் கோபி, புத்தன் குறிஞ்சி பாலாஜி ,ஏழுமலை, சூளை ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பின்னர் நிருபர்களிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது: மணிப்பூர் கலவரம் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் மோடிக்கு அதுபற்றிய நினைவு வந்திருக்கிறது. மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். பாஜகவிற்கு 350 இடங்கள் கிடைக்கும் என்று மார்த்தட்டிக்கொள்கின்றனர். ஆனால், அவர்களுக்கு 150 இடங்கள் கூட கிடைக்கப் போவதில்லை. மோடி மீதும் இடி திரும்பும் நாட்களும் வரும் ‘‘இந்தியா’’ கூட்டணியில் மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால் என்று பிரபலமான கட்சிகளும், தலைவர்களும் கைகோர்த்து இருக்கிறார்கள்.

ஆனால், மோடியின் அணியில் தலைவரும் அவரே, தொண்டரும் அவரே என்ற நிலையில் உள்ள ஒரு கட்சி இருக்கிறது. அது தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி. ஜி.கே. வாசனுக்கு அவரது குடும்பத்தினரே ஓட்டு போட மாட்டார்கள். மனசாட்சி இருந்தால் அவர் கூட அந்த கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார். பாஜ தலைவர் அண்ணாமலை நடைபயணம் போவதாக சொல்கிறார்கள். நடைபயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல்காந்தி ஆகிவிட முடியாது. ராகுல்காந்தி கால்நடையாய் சென்று நாடு முழுவதும் மக்களை சந்தித்தார். ஆனால், அண்ணாமலை கார் பயணம் செல்ல உள்ளாராம். அந்த பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

இன்றைய தேதியில் அண்ணாமலை தான் தமிழ்நாட்டில் மிகப்பெரிய நடிகர். சிவாஜியை விட நன்றாக நடிக்கிறார். பாத யாத்திரைப் போனால் ராகுல் காந்தி ஆகிவிடலாம் என்று அவர் நினைக்கிறார். பாதயாத்திரை போகின்ற வரையில் தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவராக நீடிப்பாரா என்பதே சந்தேகம் தான். தமிழகத்தில் என்றுமே பாஜகவுக்கு இடமில்லை. தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அண்ணாமலை குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அவர் கூறும் எந்த குற்றச்சாட்டையும் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாது. அண்ணாமலை வெளியிடும் தி.மு.க. பைல்கள் எல்லாமே பெயில் ஆகும் இவ்வாறு கூறினார்.

The post தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நீடிப்பாரா என்பதே சந்தேகம் தான்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Pa. J.J. ,Anamalai ,E. EV K.K. ,S.S. ,Alanghoven ,Chennai ,Pathyatra ,J.J. ,S.S. Ilangovan ,Tamil Nadu Pa ,E. EV K.K. S.S. ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...