×

நாட்றம்பள்ளி அடுத்த கிழக்குமேடு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

*மர்ம ஆசாமிகள் கைவரிசை

நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி அடுத்த கிழக்குமேடு பகுதியில் மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கல்நார்சாம்பட்டி ஊராட்சி கிழக்குமேடு பகுதியை சேர்ந்தவர் கருப்பன். இவரது மகன் திருப்பதி(38). இவரது மனைவி சுமித்ரா(33). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் குழந்தைகள் பள்ளிக்கு சென்ற நிலையில், திருப்பதி மற்றும் அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டி கூலி வேலைக்கு சென்றுள்ளனர்.
பின்னர், மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கபட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் உள்ளே சென்று பாத்தனர்.
அதில், பூஜை அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து ஒன்றறை சவரன் தங்க நகைகள், ₹15 ஆயிரம் பணம், ஆதார், ஏடிஏம், வங்க பாஸ் புத்தகம், வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்த திருப்பதி நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் மலர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நாட்றம்பள்ளி அடுத்த கிழக்குமேடு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Nadrampalli ,Azamis ,East Madam ,Tendrampalli ,Dinakaran ,
× RELATED சாலை விபத்தில் படுகாயம் அடைந்த...