சென்னை: சிவசங்கர் பாபாவுக்கு 2 போக்சோ வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி முன்னாள் மாணவிகள், சிவசங்கர் பாபா தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தனர். அதன்பேரில், அவர் மீது போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தற்போது அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 2 மனுக்கள் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், சிவசங்கர் பாபா தன் மீது போடப்பட்டுள்ள மூன்று போக்சோ வழக்குகளில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார் இம்மனுவை விசாரித்த செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி தமிழரசி இரண்டாவது மற்றும் மூன்றாவது போக்சோ வழக்கில் மட்டும் ஜாமீன் வழங்கினார். 2 வழக்கில், ஜாமீன் கிடைத்தும், மற்ற வழக்கில் ஜாமீன் கிடைக்காததால், சிவசங்கர் பாபா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். …
The post சிவசங்கர் பாபாவுக்கு 2 போக்சோ வழக்கில் ஜாமீன் appeared first on Dinakaran.