×

ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தவருக்கும், குஜராத் மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!

டெல்லி: ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தவருக்கும், குஜராத் மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மோடி என்ற வார்த்தை குறித்து விமர்சனம் செய்ததாக ராகுல் காந்தி மீது பர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். பர்னேஷ் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. வழக்கு விசாரணையை ஆக.4-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தவருக்கும், குஜராத் மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!! appeared first on Dinakaran.

Tags : Gujarat State Ware Supreme Court ,Rahul Gandhi ,Delhi ,Supreme Court of State Warehouse of Gujarat ,Modi ,Gujarat State State Warehouse Supreme Court ,Dinakaran ,
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...