×

பணம் கேட்டு மிரட்டிய நான்கு பேர் கைது

 

சிவகங்கை, ஜூலை 21: சிவகங்கை சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகுடபதி(26). இவர் தன்னுடைய நண்பர்களான பிரவீன்(27), மணிகண்டன்(25), ஹரிஹரன்(25) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தங்களது நண்பரை பார்ப்பதற்கு வந்துள்ளனர். மருத்துவமனை வெளியே உள்ள டீக்கடைக்கு சென்று டீக்கடை ஊழியர்களிடம் ரூ.500 தரும்படி கேட்டுள்ளனர்.

ஊழியர்கள் தர மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும் கடையில் இருந்தவர்களை தாக்கி கையில் வைத்திருந்த வாளால் வெட்ட முயன்றனர். இதை பார்த்த அங்கிருந்த கட்டுப்பாட்டு அறை போலீசார் சிவகங்கை நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து எஸ்ஐ ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் நான்கு பேரையும் வழக்கு பதிவு கைது செய்தனர்.

The post பணம் கேட்டு மிரட்டிய நான்கு பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Makudapathi ,Samathuvapuram ,Praveen ,Manikandan ,Hariharan ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்