×

கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

 

திருப்பூர், ஜூலை 21: திருப்பூரை அடுத்த அருள்புரம் பகுதியை சேர்ந்தவர் சிவா (எ) சிவக்குமார் (50). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு, 3 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக தெரிகிறது. இதுகுறித்து குழந்தையின் தாயார் பல்லடம் மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில், சிவக்குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

The post கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Siva (A) Sivakumar ,Arulpuram ,
× RELATED திருப்பூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சஸ்பெண்ட்