×

மளிகை கடையில் மாமூல் கேட்டு தகராறு

 

திருப்பூர், ஜூலை 21: திருப்பூர், இடுவாய், பாரதிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர், மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த, 17ம் தேதி இவரது கடைக்கு சென்ற, போதை வாலிபர்கள் இருவர் தகராறில் ஈடுபட்டனர். கடையில் மாமூல் பணம் தர வேண்டும் என்று கூறி அடாவடி செய்தனர். பணம் தர மறுத்த பெண்ணை தகாத வார்த்தையில் பேசி, கடையில் இருந்த பாட்டில்களை உடைத்தனர். கற்களை கடை மீது வீசினர். தடுக்க வந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டனர். போதை வாலிபர்கள் குறித்து மங்கலம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக, சூர்யா, (22), சூர்யபிரகாஷ், (23) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர் மீது, அடிதடி, வழிப்பறி என ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மளிகை கடையில் மாமூல் கேட்டு தகராறு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur, Iduai, Bharathipuram ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மத்திய பேருந்து...