×

துவரங்குறிச்சி அருகே நெடுஞ்சாலையோரம் கார் கவிழ்ந்து விபத்து

 

துவரங்குறிச்சி, ஜூலை 21: துவரங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரில் ஸ்டேரிங் லாக் ஆனதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மருத்துவக்கல்லூரி மாணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த கார்த்திகேயன் (35) என்பவர் சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு பயின்று வருகிறார். இவர் நேற்று ஊருக்கு செல்வதற்காக தனது காரில் சிவகங்கையில் இருந்து முசிறிக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச் சென்றார்.

அப்போது திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அடுத்த முக்கண்பாலம் அருகே செல்லும்போது காரின் ஸ்டேரிங் லாக் ஆனதால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரை தாண்டி மறுபக்கத்தின் சாலையை கடந்து சென்று அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த கார்த்திகேயன் காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post துவரங்குறிச்சி அருகே நெடுஞ்சாலையோரம் கார் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Dwarankurichi ,Dwarangurichi ,Dinakaran ,
× RELATED துவரங்குறிச்சி பகுதியில் காட்டு...