×

செங்கல்பட்டில் புடவையில் தீ பிடித்து மூதாட்டி பரிதாப பலி

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மேலமையூரை சேர்ந்தவர் ராஜம்மாள் (87). இவரது வீட்டில் திடீரென மின் விநியோகம் தடைப்பட்டது. இந்நிலையில், இவர் வீட்டின் வெளியே வந்தார். அப்போது, அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த தீ ராஜம்மாள் புடவையில் பற்றி மளமளவென எரிந்தது. இதில், பலத்த காயமடைந்த அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த 13ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் ராஜம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவரது உறவினரிடம் சடலத்தை ஒப்படைத்தனர். இச்சம்பவம் மேலமையூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post செங்கல்பட்டில் புடவையில் தீ பிடித்து மூதாட்டி பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : sari ,chengalpattu ,Chengalpaddu ,Rajammal ,Ancestor Pity ,Sarey ,Sankalpattu ,
× RELATED செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா