×

திருக்கழுக்குன்றத்தில் முதியவரிடம் ரூ.50 ஆயிரம் வழிப்பறி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரியம்மன் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (60). இவர் நேற்று திருக்கழுக்குன்றம் பெரிய தெருவில் உள்ள ஒரு வங்கியில் தனது கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். அந்தப் பணத்தை ஒரு பையில் வைத்து தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, வழியில் 2 பைக்குகளில் வந்த 4 மர்ம நபர்கள் கமலக்கண்ணனின் பைக்கை வழிமறித்து பணம் வைத்திருந்த பையை பிடுங்கிக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து கமலக்கண்ணன் திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து முதியவரிடம் பணம் பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post திருக்கழுக்குன்றத்தில் முதியவரிடம் ரூ.50 ஆயிரம் வழிப்பறி appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Kamalakannan ,Thirupasundariamman Street, Thirukkalukkunram ,Thirukkalukkunram Periya Street ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்