×

பொதட்டூர்பேட்டை பகுதியில் திமுக கவுன்சிலர்களை புறக்கணிக்கும் அதிமுக பேரூராட்சி தலைவர்: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், பொது சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் 18 பகுதிகளில் பொது கழிப்பிடங்கள் உள்ளன. இதில் திமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற்ற புதூர், சவுட்டூர் உட்பட ஐந்து பகுதிகளில் உள்ள பொது கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்காமல் சேதமடைந்து பூட்டிய நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்கள் சாலையோரங்களில் மலம், சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, புதிய கழிப்பிடம் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி திமுக கவுன்சிலர் அனுஷியா சிவா, அதிமுக பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரனிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. திமுக கவுன்சிலர்களை அதிமுக பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் புறக்கணித்து வருவதால் 50க்கும் மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் சேதமடைந்துள்ள பொது கழிப்பிடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், பொது கழிப்பிடம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

The post பொதட்டூர்பேட்டை பகுதியில் திமுக கவுன்சிலர்களை புறக்கணிக்கும் அதிமுக பேரூராட்சி தலைவர்: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,DMK ,Pothatturpet ,PALLIPATTA ,Podhaturpet Municipality ,Tiruvallur District ,council ,Dinakaran ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை