×

சிவகிரியில் பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் அர்ச்சகர் உடல் மீட்பு

சிவகிரி, ஜூலை 21: தென்காசி மாவட்டம், சிவகிரி மீனாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜகோபால் மகன் ராஜேஷ் (40). கோயில் அர்ச்சகராக வேலைபார்த்து வந்தார். திருமணம் ஆகாத இவர் சிவகிரி வடக்கு ரதவீதியில் உள்ள மாரியப்பன் என்பவரது வீட்டில் கடந்த 3 மாதங்களாக வாடகைக்கு வசித்து வந்தார். இதனிடையே இவரது வீடு கடந்த இரு நாட்களாக திறக்கப்படாமல் உட்புறமாக பூட்டப்பட்டு இருந்த நிலையில் நேற்று வீட்டினில் இருந்து துர்நாற்றம் வீசியது. தகவலறிந்து விரைந்து வந்த சிவகிரி எஸ்ஐ ஆறுமுகச்சாமி மற்றும் போலீசார், கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜேஷ் இறந்து கிடந்தார். மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதோடு அருகே மது பாட்டிலும் கிடந்தது. இதையடுத்து உடலை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்த போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிவகிரியில் பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் அர்ச்சகர் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Archakar ,Sivagiri ,Rajagopal ,Rajesh ,Meenakshi Amman Kovil Street, Sivagiri District.… ,
× RELATED சிவகிரி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்