×

ஆன்லைன் சூதாட்டம் ரூ.30,000 இழந்த வாலிபர் தற்கொலை

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை மீனவர் குப்பத்தை சேர்ந்தவர் பசுபதி (25). தனியார் கம்பெனியில் வேலை செய்த இவர், கடனில் கார் வாங்கினார். அதற்குரிய மாத தவணையை சில மாதங்களாக செலுத்த இயலாமல் போனது. இதனால் வங்கியில் கடன் கோரி விண்ணப்பித்தார். அவர் வசித்த வீடு ஓட்டு வீடு என்பதால் வங்கி நிர்வாகம் கடன் கொடுக்க மறுத்தது. தவணை தொகை செலுத்த தவறியதால், கம்பெனி ஊழியர்கள் பசுபதியின் காரை எடுத்துச் சென்றனர். தவணை தொகையை செலுத்தி காரை மீட்க ஆன்லைன் ரம்மி மூலம் பணம் சம்பாதிக்க முடிவு செய்தார். ஆனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.30 ஆயிரத்தை இழந்தார். இதனால் மனமுடைந்து, கடந்த 18ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

The post ஆன்லைன் சூதாட்டம் ரூ.30,000 இழந்த வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Pashupati ,Ramanathapuram District ,Lower Fisherman Kubbam ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார்...