×

கொடைக்கானல் ஐயர் கிணறு பகுதியில் குடிநீர் வசதிக்கு போர்வெல் அமைப்பு

 

கொடைக்கானல், ஜூலை 20: கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட பிரகாசபுரத்தில் உள்ளது ஐயர் கிணறு பகுதி. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் குடிநீர் வசதி வேண்டி தொகுதி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமாரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனடிப்படையில் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் ஐயர்கிணறு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி கொடுத்தனர். அதன்படி நேற்று அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் நகர்மன்ற தலைவர், துணை தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.

The post கொடைக்கானல் ஐயர் கிணறு பகுதியில் குடிநீர் வசதிக்கு போர்வெல் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal Iyer well ,Kodaikanal ,Iyer ,Prakasapuram ,Kodaikanal Municipality ,Dinakaran ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்