×

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆய்வுகூட்டத்தில் தகவல் சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது

 

தஞ்சாவூர் , ஜூலை 20: கபிஸ்தலம் எஸ்ஐ சேகரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கபிஸ்தலம் அருகே உள்ள கருப்பூர் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் வடசருக்கை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுயம்பிரகாசம் மகன் ராமராஜ் (32) என்பதும், அவர் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்றதும் தெரியவந்தது.

அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்கள், ரூ.600 ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் கபிஸ்தலம் காமராஜர் நகர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற ரமேஷ் மகன் திருநாவுக்கரசு (20) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post தஞ்சாவூரில் நடைபெற்ற ஆய்வுகூட்டத்தில் தகவல் சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Kapistalam ,SI Shekaran ,Dinakaran ,
× RELATED கபிஸ்தலம் அருகே மது விற்ற 2 பேர் கைது