×

வாங்கல் அருகே தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்த வாலிபர்

 

கரூர், ஜூலை 20: கரூர் மாவட்டம் வாங்கல் அருகே தண்ணீர் தொட்டியில் இறங்கி குளிக்க முயன்ற தனியார் நிறுவன ஊழியர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள பெரியவள்ளிபாளையத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் (35). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 17ம்தேதி அன்று, வெளியே சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறி விட்டு வெளியே சென்ற பிரேம்குமார், வீடு திரும்பவில்லை. இந்நிலையில், குப்பாச்சிகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள கிணற்றை ஒட்டியிருந்த தண்ணீர் தொட்டியில் பிரேம்குமார் இறந்த நிலையில் கிடப்பதாக இந்த பகுதியினர் தகவல் அளித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற வாங்கல் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தண்ணீர் தொட்டியில் குளிப்பதற்காக இறங்கிய பிரேம்குமார், திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக தண்ணீரில் முழ்கி இறந்திருக்கலாம் என்ற அடிப்படையில், உறவினர்கள் புகாரின் பேரில், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வாங்கல் அருகே தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்த வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Wangal ,Karur ,Wangal, Karur ,Dinakaran ,
× RELATED செங்குந்தபுரம் செல்லும் சாலையில்...