×

திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம்

புழல்‌: மாதவரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் புழல் போலீஸ் நிலைய வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. புழல் போலீஸ் உதவி ஆணையர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், சதீஷ் முன்னிலை வைத்தனர். புழல், மாதவரம் பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர்.

அப்போது, புழல் போலீஸ் உதவி ஆணையர் ஆதிமூலம் பேசுகையில், ‘‘பல்வேறு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் குடிபோதையிலும் கஞ்சா போதையிலும் திருநங்கைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு வற்புறுத்தி, மறுப்பு தெரிவிக்கும்போது கொலை செய்யும் அளவுக்கு எல்லை மீறுதல் நடக்கிறது. எனவே, திருநங்கைகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அத்தகைய செயல்களில் இருந்து விடுபட வேண்டும்.

சுயதொழில் மற்றும் வேறு தொழில்கள் தொடங்கவும் மாற்று வழியில் செல்ல ஏதேனும் உதவிகள் தேவைப்படுமானால் எங்களிடம் தெரிவித்தால் நாங்கள் உரிய அரசு அதிகாரியிடம் கலந்துபேசி அதற்கான வழிகளை ஏற்பாடு செய்து தருவோம்’’ என்றார். நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர்கள் ராஜா, பவானி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : awareness ,Puzhal ,Madhavaram ,Transgender awareness ,Dinakaran ,
× RELATED மாதவரம் மண்டலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைக்க பொது மக்கள் வேண்டுகோள்