×

சேத்துப்பட்டு வணிக வளாகத்தின் 4வது மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி பலி: பெயின்ட் அடிக்கும்போது விபரீதம்

சென்னை: சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் பிரபல வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, கடந்த ஒரு வாரமாக பெயின்ட் அடிக்கும்பணி நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலை திருக்கோவிலூரை சேர்ந்த ஐயப்பன் (37) மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் வணிக வளாகத்தின் 4வது மாடியில் கயிறு கட்டி பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது திடீரென கயிறு அறுந்ததில் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்த ஐயப்பன் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.

உடனே அருகில் இருந்தவர்கள் ஐயப்பனை மீட்டு பெரியார் நகரில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ஐயப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து, வணிக வளாகத்திற்கு பெயின்ட் அடிக்க ஒப்பந்தம் எடுத்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சேத்துப்பட்டு வணிக வளாகத்தின் 4வது மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி பலி: பெயின்ட் அடிக்கும்போது விபரீதம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Harrington Road ,Sethupattu, Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...