×

சென்னை மாநகராட்சி பகுதிகளில் இரண்டு மாதத்தில் 169 கி.மீ., நீள 897 தார்சாலை பணிகள் நிறைவு: மீதி பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 169 கி.மீ., நீளத்திலான 897 தார்சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது என்றும், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் 2023-24ம் நிதியாண்டில் ரூ.433.28 கோடி மதிப்பீட்டில் 3,676 எண்ணிக்கையிலான 645.60 கி.மீ., நீளமுடைய சாலைப் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தங்கள் கோரப்பட்டது. இதில், தற்போது கடந்த இரண்டு மாதங்களில் ரூ.99 கோடி மதிப்பீட்டில் 169 கி.மீ. நீளத்தில் 897 எண்ணிக்கையிலான தார்சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.20.69 கோடி மதிப்பீட்டில் 24 கி.மீ. நீளத்தில் 196 சிமென்ட் கான்கிரீட் சாலைப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட மடிப்பாக்கம், ஆலந்தூர் மண்டலத்திற்குப்பட்ட மணப்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட வளசரவாக்கம் பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2 மாதங்களில் கொசஸ்தலையாறு வடிநில திட்ட நிதியின் கீழ் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் 703 கி.மீ. நீளத்தில் ஒருங்கிணைந்த மழைநீர்வடிகால் பணிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 119.57 கி.மீ. நீளத்திற்கும், கோவளம் வடிநில திட்ட நிதியின் கீழ் கோவளம் வடிநிலப் பகுதியில் 160 கி.மீ., நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகளில் 48 கி.மீ. நீளத்திற்கும், மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் 60 கி.மீ., நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 2.55 கி.மீ. நீளத்திற்கும், சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 7.40 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 2.77 கி.மீ. நீளத்திற்கும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிதியின் கீழ் ஒரு கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 0.39 கி.மீ. நீளத்திற்கும் தொடர்ந்து பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சாலை அமைக்கும் பணிகளும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும், தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை விரைந்து முடித்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னை மாநகராட்சி பகுதிகளில் இரண்டு மாதத்தில் 169 கி.மீ., நீள 897 தார்சாலை பணிகள் நிறைவு: மீதி பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : 897 tarsal road ,Chennai Municipal Corporation ,Chennai ,road ,
× RELATED சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை...