×

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..!!

டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சிகள் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. எதிர்க் கட்சிகளின் கோரிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் தம்பிதுரை எம்.பி. உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதிமுக மக்களவை உறுப்பினராக பங்கேற்றிருப்பதாக ரவீந்திரநாத் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. நாளை தொடங்கும் மழைக்கால கூட்டத் தொடரில் 21 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நாளை தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ம் தேதி வரை பழைய நாடாளுமன்றத்தில் நடக்கிறது.

The post நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Parliament ,Raintime Segment ,Dinakaran ,
× RELATED புதிய எம்பி.க்களுக்கு நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் பிரமாண்ட வரவேற்பு