×

பைக்கில் லிப்ட் கேட்டு சென்றபோது கல்லூரி மாணவியை தாக்கி பலாத்காரம்: நாமகிரிப்பேட்டை வாலிபர் கைது

ராசிபுரம்: ராசிபுரம் அருகே பைக்கில் லிப்ட் கேட்டு சென்றபோது கல்லூரி மாணவியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனியார் கல்லூரியில், கரூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் தினமும் பேருந்து மூலம் கல்லூரிக்கு சென்று வருகிறார். வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல நேற்று காலை ஆண்டகளூர்கேட் நிறுத்தத்தில் பேருந்துக்கு காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் பேருந்து வராததால், அவ்வழியாக டூவீலரில் வந்த வாலிபரிடம் லிப்ட் கேட்டு ஏறி சென்றுள்ளார்.

அப்போது மாணவியிடம். தனது அக்காவிற்கு குழந்தை பிறந்துள்ளதால் அவரை பார்த்து விட்டு கல்லூரியில் இறக்கி விடுவதாக வாலிபர் கூறியுள்ளார். தொடர்ந்து ராசிபுரம் தொப்பம்பட்டி அருகேயுள்ள சின்னக்காபட்டி ஏரிக்கரை அருகே டூவீலரை நிறுத்திய வாலிபர், தனது அக்கா வீடு மலையின் மேல் பகுதியில் உள்ளதாக கூறி மாணவியை அழைத்து சென்றுள்ளார். சிறிது தூரம் சென்ற நிலையில், திடீரென அந்த வாலிபர் மாணவியை தாக்கி கட்டாயப்படுத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், மாணவியிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.160ஐ பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, அவ்வழியாக வந்தவரிடம் செல்போனை வாங்கி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவியை மீட்டனர். தப்பி ஓடிய வாலிபரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மாணவி கூறிய அடையாளங்களை வைத்து, புதிய பேருந்து நிலையம் வழியாக சென்ற அந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அவர், நாமகிரிப்பேட்டை தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன் (26) என்பதும், மெட்டாலா அருகேயுள்ள கரும்பு அரவை ஆலையில் வேலை பார்த்து வந்ததும், மாணவியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் ெசய்து செல்போனை பறித்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக மகளிர் காவல் துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்த 6 மணி நேரத்தில் துரித நடவடிக்கை எடுத்து மாணவியை மீட்டு, குற்றவாளியை கைது செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

The post பைக்கில் லிப்ட் கேட்டு சென்றபோது கல்லூரி மாணவியை தாக்கி பலாத்காரம்: நாமகிரிப்பேட்டை வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Namakrippet ,Rasipuram ,Namakirippet ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட பெண் ஏட்டு விபத்தில் பலி