×

அம்மன் தரிசனம்: வீரபாண்டி கௌமாரி

தேனி மாவட்டம் முல்லையாறு பாய்ந்தோடும் பகுதியில் அமைந்துள்ள வீரபாண்டியில் வீற்றிருக்கிறாள், கௌமாரியம்மன். இந்த மாவட்ட மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்குகிறாள். மதுரையை ஆண்ட மன்னன் வீரபாண்டியனுக்கு இரு கண்களும் பாதிப்பட்டன. அரசன் பார்வை பெறவேண்டி ஈசனை நோக்கி தவமிருந்தான்.

ஈசனும், ‘‘புள்ளைநல்லூரியில் கண்ணுடைய தேவி தவமிருக்கிறாள். அவளுக்காக கோயில் எழுப்பு’’ என்று அருளாணையிட்டார். மன்னனும் அதை ஏற்று கோயில் கட்டினான். கண் பார்வை பெற்றான். வீரபாண்டி மாரி என்று அம்மனும் வழிபடப்பட்டு வருகிறாள்.

இன்றும் பார்வைக் கோளாறு உள்ளவர்கள் இத்தலத்தை நோக்கி வந்து நலம் பெறுகிறார்கள். தேனி – கம்பம் வழியில் தேனியிலிருந்து 8 கி.மீ. தொலைவில்
இத்தலம் அமைந்துள்ளது.

The post அம்மன் தரிசனம்: வீரபாண்டி கௌமாரி appeared first on Dinakaran.

Tags : Amman Vision ,Veerabandi Koumari Goumariamman ,Veerabandi ,Theni district ,Mullaiyar Phayindodam ,Veerabandi Koumari ,
× RELATED தேனி வீரபாண்டி கோயிலில் உண்டியல் வசூல் ரூ.13.04 லட்சம்