×

கண்ணாடி மாளிகையில் சுற்றுலா பயணிகளை கவரும் ஜெரோனியம் மலர்கள்

ஊட்டி : தமிழகம் மாளிகை பூங்கா கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள ஜெரோனியம் மலர்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இரண்டாம் சீசனை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா முழுவதிலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. 12 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இதேபோன்று, ஊட்டி பிங்கர்போஸ் பகுதியில் உள்ள தமிழகம் மாளிகை பூங்காவிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு மலர்கள் பூத்துள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.இது மட்டுமின்றி, பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த தொட்டிகள் கண்ணாடி மாளிகையில் உள்ள மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜெரோனியம், பிகோனியா மலர்கள் அதிகளவு வைக்கப்பட்டுள்ளன. பல வண்ணங்களில் பூத்துள்ள ஜெரோனியம் மலர்கள் தற்போது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் செடிகளின் அருகே நின்று புகைப்படங்களை எடுத்துச் செல்கின்றனர். …

The post கண்ணாடி மாளிகையில் சுற்றுலா பயணிகளை கவரும் ஜெரோனியம் மலர்கள் appeared first on Dinakaran.

Tags : Oodi ,Tamil Nadu House Park ,
× RELATED முறைகேடுகள் ஏதும் நடக்கிறதா?...