×

காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை

முஷ்ணம், ஜூலை 19: முஷ்ணம் சப்தரிஷி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரும், பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த சத்தியபிரியா (28) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இதில் சத்தியபிரியாவின் குடும்பத்திருக்கு விருப்பம் இல்லை. இதனால் அவர்கள் தம்பதியரிடம் பேசாமல் இருந்தனர். பின்னர் ஐந்தாவது மாதம் சீர் செய்வது தொடர்பாக இருவீட்டாருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. தொடர்ந்து சத்தியபிரியாவிற்கு வைஷ்ணவி என்கிற பெண் குழந்தை பிறந்தது. சத்தியபிரியா பூ கட்டுதல் மற்றும் மாவு அரைக்கும் தொழில் செய்து வந்தார். மணிகண்டன் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். மணிகண்டனுக்கு குடி பழக்கம் உள்ளது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த சத்தியபிரியா நேற்று முன்தினம் வீட்டில் சேலையில் தூக்குபோட்டு கொண்டாராம். இதை பார்த்த அவரது மாமியார் தனலட்சுமி, கணவர் மணிகண்டன் ஆகியோர் மீட்டு முஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சத்தியபிரியா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த அவரது தாயார் சாந்தா முஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் சுபிக்ஷா, சிறப்பு உதவி ஆய்வாளர் மதுபாலன் மற்றும் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Mushnam ,Sabdrishi Street ,Manikandan ,Satyapriya ,Palyangote ,
× RELATED குளத்தில் மூழ்கி 2 மனவளர்ச்சி குன்றிய சிறுவர்கள் சாவு