×

சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவு நாளில் உருவ படத்துக்கு மரியாதை

 

மொடக்குறிச்சி, ஜூலை 19: சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 218-வது நினைவு நாளையொட்டி, சுட்டு கொல்லப்பட்ட இடமான நல்லமங்காபாளையத்தில் பொல்லான் பேரவையின் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் போர்ப்படை தளபதியாக விளங்கிய மாவீரன் பொல்லான். இவரது 218 வது நினைவு நாள் நேற்று முன்தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

மாவீரன் பொல்லானின் 218-வது நினைவு நாளையொட்டி பொல்லான் சுட்டு கொல்லப்பட்ட இடமான அரச்சலூர் அருகே நல்ல மங்காபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நீதி மக்கள் மற்றும் மாவீரன் பொல்லான் பேரவையின் சார்பில் அதன் நிறுவன தலைவர் வடிவேல் ராமன் தலைமையில் பொல்லானின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொல்லான் வாரிசுதாரர்கள் மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பொல்லான் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாநில பொது செயலாளர் இளவேனில், மாவட்ட செயலாளர்கள் சிந்தனை செல்வன், வேங்கை பென்னுச்சாமி, வெள்ளியங்கிரி மற்றும் நிறுவாகிகள் கலந்து கொண்டனர். தலித் விடுதலை கட்சி பொதுச்செயலாளர் சகுந்தலா தங்கராஜ் மாநில அமைப்பாளர் ஆறுமுகம் மற்றும் ஆதித்தமிழர் கட்சி பொது செயலாளர் விஸ்வைகுமார், மாநில நிர்வாகிகள் துறை அமுதன், குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

சமூக விடுதலை கட்சி தலைவர் ஆறுமுகம், தலித் விடுதலை இயக்க பொதுச்செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட தலைவர் பொன்சுந்தரம், திராவிட சமத்துவ கட்சி தலைவர் அண்ணாதுரை, சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி தலைவர் தங்கராஜ் மற்றும் நாடார் மகாஜன சங்க தலைவர் பொன் விசுவநாதன் மற்றும் நிர்வாகிகள் மாவீரன் பொல்லான் பேரவை பொது செயலாளர் சண்முகம் மாநில நிறுவாகிகள் ஆறுமுகம், சதீஷ்பாபு, கண்ணய்யன், மணிகண்டன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

The post சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவு நாளில் உருவ படத்துக்கு மரியாதை appeared first on Dinakaran.

Tags : Pollan ,Modakurichi ,Nallamangapalayam ,
× RELATED காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு