×

மேலூரில் மாட்டு வண்டி பந்தயம் நடத்தியவர்கள் மீது வழக்கு

 

மேலூர், ஜூலை 19: ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டுமே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுகட்டு, மாட்டுவண்டி பந்தயம் ஆகியவை நடத்தப்பட வேண்டும். அதை மீறி நடத்துபவர்கள் மீது, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மேலூர் தாசில்தார் செந்தமாரை ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் இதனை மீறி கொட்டாம்பட்டி பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மேலூர் கொட்டகுடி சாலையில் அனுமதியின்றி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. இது குறித்து கொட்டகுடி விஏஓ சதீஸ் கண்ணன் மேலூர் போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து நேற்று கொட்டகுடியை சேர்ந்த 5 பேர் மீது மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

The post மேலூரில் மாட்டு வண்டி பந்தயம் நடத்தியவர்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Cow Cart ,Malore ,Jallikattu ,Monasturvattu ,Eruthuvattu ,Cow Betting ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி முள்ளிப்பாடியில் ஜல்லிக்கட்டு 840 காளைகள் சீறிப்பாய்ந்தன