×

இழப்பீடு வழங்காததை கண்டித்து முற்றுகை

 

சிவகங்கை, ஜூலை 19: சிவகங்கையில் அரசு கையகப்படுத்திய இடத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடந்து. தஞ்சாவூரில் இருந்து மானாமதுரை வரை சாலை அகலப்படுத்தும் பணிக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் பகுதியில் இருந்த 45 சென்ட் இடத்தை கடந்த 2016ம் ஆண்டு அரசு கையகப்படுத்தியது. இந்த இடம் 9 பேருக்கு சொந்தமானது. இந்த இடத்திற்கு அரசு ரூ.67 லட்சத்து 65ஆயிரம் வழங்க வேண்டும்.

இடம் கையகப்படுத்தி 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை நிலத்தின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வில்லை. இதனால் இழப்பீடு கிடைக்காதவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பெரோஸ்காந்தி தலைமையில் சிவகங்கை பெரியார் நகரில் உள்ள தஞ்சாவூர் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தனி தாசில்தார் மகாதேவன் மற்றும் சிவகங்கை தாசில்தார் பாலகுரு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

The post இழப்பீடு வழங்காததை கண்டித்து முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Dinakaran ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்