×

மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது

 

திருப்பூர், ஜூலை 19: திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் மசாஜ் சென்டர் நடத்தி வருபவர் பிரபாகரன். நேற்று முன்தினம் இரவு திடீரென அங்கு சென்ற 3 பேர் கொண்ட கும்பல் பிரபாகரனை மிரட்டி பணம் கேட்டுள்ளது. இதுகுறித்து அவர் 15.வேலம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் பாலகிருஷ்ணன் (36), யோகேஸ்வரன் (30), குமரேசன் (25) என்பது தெரிய வந்தது. மேலும் அந்த 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிரபாகரனை மிரட்டி பணம் கேட்டதை அவர்கள் ஒப்புகொண்டனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Prabhakaran ,15 Velampalayam ,Dinakaran ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...