×

இளம்பெண் தற்கொலை ஆர்டிஓ விசாரணை

 

திருவிடைமருதூர், ஜூலை 19: திருப்பனந்தாள் அருகே விளத்தொட்டி ஆதிதிராவிடர் தெருவில் வசிப்பவர் ராஜா (26). இவரது மனைவி சபிதா (20). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 மாத கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில் சபிதாவின் கணவர் பெங்களூரில் லோடு வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூருக்கு வேலைக்கு சென்றார். நேற்று முன்தினம் ராஜாவுக்கும், சபிதாவுக்கும் செல்போனில் பேசும்போது தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த சபிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பந்தநல்லூர் காவல் துறையினர் சென்று சபிதாவின் உடலை கைப்பற்றி திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான ஒன்றரை ஆண்டில் சபிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் கும்பகோணம் ஆர்டிஓ பூர்ணிமா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

The post இளம்பெண் தற்கொலை ஆர்டிஓ விசாரணை appeared first on Dinakaran.

Tags : RTO ,Tiruvidaimarudur ,Raja ,Vilathotti Aditravidar Street ,Thirupanandal ,Sabitha ,
× RELATED புதிய செயலி மூலம் வாகன புகை பரிசோதனை சான்று