×

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார் தமிழ்நாடு நாள் விழாவையொட்டி பெரம்பலூரில் விழிப்புணர்வு பேரணி

 

பெரம்பலூர், ஜூலை 19: தமிழ்நாடு நாள் விழாவையொட்டி பெரம்பலூரில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி மற்றும் புகைப்படக்கண்காட்சி. மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து, மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட தமிழ்நாடு நாள் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழ்நாடு நாள் குறித்த புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்திலிருந்து விழிப்புணர்வு பேரணியை பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் கற்பகம் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 600க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பேரணி பாலக்கரை வழியாக கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் தமிழ்மொழி குறித்தும், தமிழ்நாட்டின் பெருமைகள் குறித்தும் பறைசாற்றும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

பின்னர், கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழ்நாடு நாள் குறித்தும், தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை மாவட்ட கலெக்டர் கற்பகம் திறந்து வைத்து பார்வையிட்டார். 18ம்தேதி முதல் வருகிற 23ம்தேதி வரை 6 நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த புகைப்பட கண்காட்சியை பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் வந்து பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் எஸ்பி ஷ்யாம்ளாதேவி, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, நகராட்சித்தலைவர் அம்பிகா ராஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர்கள் (பெரம்பலூர்) மீனா அண்ணாதுரை, (வேப்பந்தட்டை) ராமலிங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாவேந்தன், முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார் தமிழ்நாடு நாள் விழாவையொட்டி பெரம்பலூரில் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Minister ,S.S.Sivasankar ,Perambalur ,Tamil Nadu Day ,S.S. Sivasankar ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...