×

குடித்துவிட்டு வந்து தகராறு மனைவியை தாக்கிய எலக்ட்ரீஷியன் கைது

ஆவடி: ஆவடியை அடுத்து திருமுல்லைவாயல் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜேஷ் (42). எலக்ட்ரீஷியன். குடிப்பழக்கம் உடையவர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல் குடித்துவிட்டு வந்தவரை அவரது, மனைவி மீரா (36) தட்டிக்கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த ராஜேஷ் அருகில் இருந்த தூக்குவாளியை எடுத்து மனைவியை அடித்துள்ளார்.

இதில், மீராவின் பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவரின், அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு ஓடிவந்து அவரை மீட்டனர். பின்னர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தலையில் ஏற்பட்ட காயத்திற்கு எட்டு தையல் போடப்பட்டது. இது குறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர்.

The post குடித்துவிட்டு வந்து தகராறு மனைவியை தாக்கிய எலக்ட்ரீஷியன் கைது appeared first on Dinakaran.

Tags : Avadi ,Rajesh ,Tirumullaivayal Ayyappakkam Housing Board ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு திருப்போரூர்...