மும்பை: தமது குழுமத்தின் நற்பெயரை கெடுக்கும் முயற்சி தான் ஹிண்டன்பர்க் அறிக்கை என அதானி நிறுவனத்தின் தலைவர் கவுதம் அதானி விளக்கம் அளித்துள்ளார். பங்குச்சந்தையில் அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், நிதி மோசடி செய்ததாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு அறிக்கையொன்றை வெளியிட்டது. இதற்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்த நிலையிலும், பங்குச்சந்தையில் அதன் பங்குமதிப்பு கடுமையாகச் சரிந்தது. இந்நிலையில் நேற்று அதானி குழுமத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடந்த நிலையில் கவுதம் அதானி ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விளக்கமளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், ‘’ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டவை அனைத்தும் தவறானவை. மேலும் அனைத்தும் போலியான குற்றச்சாட்டுகள். அதானி நிறுவனத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள அனைத்து விவகாரங்களிலும் சட்டப்படி தீர்வுகாணப்பட்டுள்ளது,’’ என விளக்கம் அளித்துள்ளார்.
The post அதானி நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்கும் முயற்சியே ஹிண்டன்பர்க் அறிக்கை: தொழிலதிபர் கவுதம் அதானி விளக்கம் appeared first on Dinakaran.