×

யானை மிதித்து தொழிலாளி பலி

தேவாரம்: தேனி மாவட்டம், தேவாரம் அருகே பண்ணைப்புரத்தை சேர்ந்த செல்லம் என்பவரது தோட்டத்தில் கூலித்தொழிலாளி முருகன்(48) நேற்று முன்தினம் வேலைக்கு சென்றார். இரவில் அங்கேயே தங்கியுள்ளார். நேற்று காலை தோட்டத்திற்கு சென்றவர்கள் முருகன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அருகில் யானையின் சாணம் கிடந்தது. இதனால் தேவாரம் பகுதிகளில் அடிக்கடி சுற்றித்திரியும் மக்னா யானை தாக்கி முருகன் இறந்திருக்கலாம் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் மக்னா யானையை அடர்ந்த காட்டிற்குள் விரட்ட வேண்டுமென வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post யானை மிதித்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Dewaram ,Murugan ,Chellam ,Farmanpuram ,Dewaram, Theni district ,Dinakaran ,
× RELATED போடி அருகே வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணி விறுவிறு