×

வாலிபருடன் தனிமையில் இருந்ததை பார்த்த சிறுவனை கொன்று கிணற்றில் வீசிய சித்தி: ஓராண்டுக்கு பின் கைது

விருதுநகர்: தகாத உறவு வைத்திருந்த வாலிபருடன் தனிமையில் இருந்ததைப் பார்த்ததால், சிறுவனைக் கொன்று கிணற்றில் வீசிய சித்தியை, ஓராண்டுக்குப் பின் போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அடுத்த ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள ஆர்.மடத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கோபால் (45). கூலித்தொழிலாளி. இவரது முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை பரந்தாமன் (9). முதல் மனைவி இறந்துவிட்டதால் கவுசல்யா (35) என்பவரை கோபால் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

கணவனுடன் வசித்து வந்த கவுசல்யா, முதல் மனைவி மகன் பரந்தாமனையும் வளர்த்து வந்தார். இந்நிலையில், ஓராண்டுக்கு முன் பரந்தாமனை திடீரென காணவில்லை. இது குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசில் கோபால் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், மடத்துப்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து பரந்தாமனின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். பரந்தாமன் விளையாடியபோது கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என போலீசார் நினைத்தனர். இருப்பினும் கவுசல்யா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது நடவடிக்கையை கண்காணித்து வந்தனர்.

மேலும், போலீசார் விசாரணையில் ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த சேது காமேஷ் (35) என்பவருக்கும், கவுசல்யாவுக்கும் தகாத உறவு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் கவுசல்யாவை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், அவர் சிறுவனை கொன்றதை ஒப்புக்கொண்டார். சிறுவன் கொலை வழக்கில் ஓராண்டுக்குப் பின் ஏழாயிரம்பண்ணை போலீசார், கவுசல்யாவை கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த சேது காமேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: சம்பவத்தன்று கவுசல்யாவும், சேதுகாமேஷும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர். இதனை சிறுவன் பரந்தாமன் பார்த்துள்ளான். இது குறித்து கோபாலிடம் சொல்லி விடுவானோ என அச்சமடைந்த கவுசல்யா, பரந்தாமனை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் அவனது உடலை கிணற்றில் வீசியுள்ளார்’ என்றனர். தகாத உறவு பிரச்னையில் சித்தியே சிறுவனை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வாலிபருடன் தனிமையில் இருந்ததை பார்த்த சிறுவனை கொன்று கிணற்றில் வீசிய சித்தி: ஓராண்டுக்கு பின் கைது appeared first on Dinakaran.

Tags : Siddhi ,Virudunagar ,Sitya ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...