வார்சா: போலந்து நாட்டின் வார்சாவில் இருந்து கிர்சினோ விமான நிலையம் நோக்கி சென்ற சிறிய ரக விமானம் ஒன்று ஹேங்கரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பேர் பலியானதாகவும், ஏழு பேர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஆடம் நீட்ஜில்ஸ்கி கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘வார்சாவில் இருந்து 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் விபத்து நடந்தது. விபத்துக்குள்ளான செஸ்னா 208 என்ற சிறிய ரக விமானத்தில் 13 பேர் பயணித்தனர். வானிலை மோசமாக இருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. சம்பவ இடத்திற்கு நான்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் 10 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டன. விமானம் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.
The post போலந்து விமான விபத்தில் 5 பேர் பலி appeared first on Dinakaran.