×

ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி(36), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி செல்வராணி(33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கார்த்திக், செல்வராணி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் நேற்றிரவும் தம்பதி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் மனமுடைந்த செல்வராணி நள்ளிரவு வீட்டை விட்டு வெளியேறினார்.

பின்னர் அம்மூரில் உள்ள வாலாஜா ரோடு ரயில் நிலையத்திற்கு சென்ற செல்வராணி இன்று அதிகாலை சென்னை நோக்கி சென்ற ஆலப்புழா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த காட்பாடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வராணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Ranipet ,Karthi ,Ammoor ,Selvarani ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...