
- ஆதாமிழ்
- கட்சி
- திண்டுக்கல்லே
- திண்டுகல்
- ஆதமிலர் கட்சி
- கிழக்கு மாவட்ட
- அடாமில் கட்சி ஆர்ப்பாட்டம்
- திண்டுக்கல்
- தின மலர்
திண்டுக்கல், ஜூலை 18: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதமிழர் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி ராஜா தலைமை வகித்தார்.
மாநில துணை செயலாளர் விருதை வசந்த், மாவட்ட தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிலக்கோட்டை தாலுகா குன்னூத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த மூன்று தலைமுறையாக குடியிருந்து விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த இடத்தில் கல் குவாரி வருவதாக கூறி சிலர் குடியிருந்து வருபவர்களிடம் காலி செய்ய சொல்லி மிரட்டி வருகின்றனர். கல் குவாரி அமைப்பதை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கலெக்டர் எங்களுக்கு அந்த இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கழுத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்வது போல் வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
The post திண்டுக்கல்லில் ஆதிதமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: தூக்குகயிறு மாட்டி வந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.