×

ஆட்டோ மரத்தில் மோதி டிரைவர் சாவு

 

கோவை, ஜூலை 18: கோவை தெலுங்குபாளையம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (60). ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் ஆட்டோவில் ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில், இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த வெள்ளிங்கிரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆட்டோ மரத்தில் மோதி டிரைவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Vellingiri ,Perumal Koil Street, Telangupalayam, Coimbatore ,Dinakaran ,
× RELATED வெள்ளிங்கிரி மலை ஏறிய சென்னை பூசாரி பலி: இதுவரை 9 பக்தர்கள் உயிரிழப்பு