×

சர்வதேச செஸ் போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

மேலூர், ஜூலை 18:சர்வதேச அளவிலான ‘பிளிட்ஸ்’ செஸ் போட்டி, மதுரை ஆனந்தி செஸ் அகாடமி சார்பில் அங்குள்ள மகாலில் நடைபெற்றது. இதில் 250 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில், மேலூர் அருகே அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் 10ம் வகுப்பு மாணவர் தேவநாத் நான்காம் இடமும், அ.செட்டியார்பட்டி அரசு துவக்கப்பள்ளியின் 5ம் வகுப்பு மாணவி வேதா 4ம் இடமும் பிடித்தனர். இவர்களில் தேவ்நாத் ஏற்கனவே சர்வதேச அளவிலான ரேட்டிங்கில் 1108 புள்ளிகள் பெற்றிருந்தார்.

தற்போது 40 புள்ளிகள் அதிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை அ.வல்லாளபட்டி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வினோத், அ.செட்டியார்பட்டி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை, பயிற்சி அளித்த இடைநிலை ஆசிரியர் செந்தில்குமார், அ.வல்லாளபட்டி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன், அ.வல்லாளபட்டி சேர்மன் குமரன், உதவி தலைமை ஆசிரியர் வாசிமலை, உடற்கல்வி ஆசிரியர்கள் சேதுபதி ராஜா, அறிவரசன், கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தினர்.

The post சர்வதேச செஸ் போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Malore ,Madurai Anandhi Chess Academy ,Maghal ,
× RELATED கொரியர் வேன் கவிழ்ந்து டிரைவர் பலி...