×

பாலத்தில் இருந்து விழுந்த கொத்தனார் சாவு

 

திருப்புவனம், ஜூலை 18: திருப்புவனம் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மதுரை அருகே ஐராவதநல்லூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ராஜபாண்டி(33). கொத்தனார். ஆடி அமாவாசைக்கு சதுரகிரியில் அன்னதானம் நடத்த உறவினர்களிடம் நிதி வசூல் செய்வதற்காக மேல வெள்ளூர் வந்தார். அப்போது மீனாட்சிபுரம் பாலத்தில் உட்கார்ந்திருந்தவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு கடந்த 9ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post பாலத்தில் இருந்து விழுந்த கொத்தனார் சாவு appeared first on Dinakaran.

Tags : Mason ,Tiruppuvanam ,Madurai ,
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை