- மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி அருப்புக்கோட்டை
- SPK
- பள்ளி மாணவர்கள்
- அருப்புக்கோட்டை
- சிவகாசி ரோட்டரி சங்கம்
- விருதுநகர்
- SPK பள்ளி
- தின மலர்
அருப்புக்கோட்டை, ஜூலை 18: அருப்புக்கோட்டை, ஜூலை 18: சிவகாசி ரோட்டரி கிளப் சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டிகள் யூ 13, யூ 14, யூ 17, ஊ 19 மற்றும் ஓபன் டு ஆல் பிரிவுகளில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகள் மற்றும் அகடாமிகளை சேர்ந்த 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் அருப்புக்கோட்டை எஸ்பிகே மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவர் சந்தோஷ், ஒற்றையர் போட்டியில் முதலிடம் பெற்றும், இரட்டையர் போட்டியில் 12ம் வகுப்பு மாணவர்கள் சந்தோஷ், பிரகதீஸ்வரன், ஆகியோம் முதலிடம் பெற்றும் கேடயங்கள், சான்றிதழ்கள் பெற்றனர்.
யூ 17 பிரிவில் 11ம் வகுப்பு மாணவர் விமல் இரட்டையர் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றும், யூ 13 பிரிவில் ஆறாம் வகுப்பு மாணவர் தேஜஸ் ஒற்றையர் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றும் கேடயங்கள், சான்றிதழ்கள் பெற்றனர். மேலும் இப்பள்ளி மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள், ஊக்குவித்த உடற்கல்வி இயக்குனர் சவுந்தரபாண்டியன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களையும் நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜன், எஸ்பிகே கல்வி குழும தலைவர் ஜெயக்குமார், பள்ளி செயலாளர் கவுன்சிலர் மணிமுருகன், பள்ளி தலைவர் சிவராம கிருஷ்ணன், உதவி தலைவர் கனகவேல், உதவி செயலாளர் தங்கராஜ், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
The post மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி அருப்புக்கோட்டை எஸ்பிகே பள்ளி மாணவர்கள் சாம்பியன் appeared first on Dinakaran.