×

சுங்குவார்சத்திரம் பஜாரில் கடையை உடைத்து ரூ.60 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (30). இவர், ஸ்ரீபெரும்புதூர் – சுங்குவார்சத்திரம் சாலையில், சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் பிஸ்மி எனும் பெயரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர், நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றார். பின்னர், வழக்கபோல் நேற்று காலை அப்துல்ரகுமான் கடையைத் திறக்க வந்தார். அப்போது, கடையின் முன்பக்க இரும்பு ஷட்டர் உடைக்கப்பட்டு, ஷோகேசில் விற்பனைக்கு வைத்திருந்த விலை குறைவான செல்போன்களை விட்டுவிட்டு, ரூ.20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரூ.60 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த அப்துல்ரகுமான், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீசார், பஜார் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து, மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமரா பதிவினை ஆய்வு செய்ததில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் டாடா ஏஸ் எனும் வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள், அப்துல்ரகுமானின் கடை முன்பு இறங்குகின்றனர். பின்னர், 3 பேரும் கடையை உடைத்து உள்ளே சென்று, செல்போன்களை 2 மூட்டைகளாக கட்டிக்கொண்டு, அதே வாகனத்தில் தப்பி செல்வது தெரியவந்தது. இப்புகாரின்பேரில் போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளின்படி கடைக்குள் புகுந்து செல்போன்களை கொள்ளையடித்து சென்ற 3 மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சுங்குவார்சத்திரம் பஜாரில் கடையை உடைத்து ரூ.60 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Chungwarchatram ,Sriperumbudur ,Abdul Raguman ,Molachur ,Sriperumbudur – ,Sunguarschatram road ,Sunguarschatram ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது