×

விதிமுறைபடி பேரவை கூட்டம் நடக்கவில்லை: முதல்வருக்கு ஆளுனர் கடிதம்

சண்டிகர்: பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. கடந்த மாதம் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மாநில சட்டபேரவையின் 2 நாள் சிறப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சீக்கிய குருத்வாரா( திருத்த) மசோதா 2023 உள்ளிட்ட 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும்படி ஆளுனர் பன்வாரிலால் புரோகித்துக்கு முதல்வர் பகவந்த் மான் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஆளுனர் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த மாதம் நடந்த பேரவை கூட்டம் சட்ட விதிமுறைகளை மீறி நடந்துள்ளது. எனவே குறிப்பிட்ட 4 மசோதாக்களை ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

The post விதிமுறைபடி பேரவை கூட்டம் நடக்கவில்லை: முதல்வருக்கு ஆளுனர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Governor ,Chief Minister ,Chandigarh ,Aam Aadmi Party government ,Punjab ,Bhagwant Singh Mann ,Dinakaran ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...