×

வீரப்பன் கூட்டாளி ஜாமீன் நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வீரப்பன் கூட்டாளி ஞானபிரகாஷின் ஜாமீனை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1993ம் ஆண்டு பாலாறு குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டணை பெற்ற வீரப்பன் கூட்டாளி ஞானபிரகாஷ் மைசூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரின் உடல் நலக்குறைவை பரிலித்து கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து மேற்கண்ட வழக்கு நேற்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 63 வயதான ஞானபிரகாசை முன்கூட்டியே விடுவிக்க கோரிய மனு மீது ஒன்றிய அரசின் கருத்து கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஞானபிரகாசின் ஜாமீனை அதுவரையில் நீட்டிப்பதாக உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.

The post வீரப்பன் கூட்டாளி ஜாமீன் நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Veerappan ,Supreme Court ,New Delhi ,Gnanaprakash ,Balaru ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...