×

அமர்நாத் யாத்திரையில் மேலும் 3 பக்தர்கள் பலி

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரின் அமர்நாத் புனித யாத்திரை கடந்த 1ம் தேதி துவங்கியது. 3,888 மீட்டர் உயரத்தில் மலையில் உள்ள பனிலிங்கத்தை இதுவரை 2.30 லட்சம் பேர் தரிசித்துள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பால்டால் மற்றும் பஹல்காம் வழித்தடங்களில் அமர்நாத் யாத்திரை தொடர்ந்து நடந்து வருகிறது.

புனித யாத்திரையின் போது 3 பக்தர்கள் நேற்று உயிரிழந்தனர். அதில் இரண்டு பேர் மாரடைப்பினால் இறந்ததாகவும், மேலும் ஒருவரின் இறப்பு குறித்த விவரம் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து இந்த ஆண்டு யாத்திரையின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

The post அமர்நாத் யாத்திரையில் மேலும் 3 பக்தர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Amarnath Yatra ,Sri Nagar ,Amarnath ,Jammu and ,Kashmir ,
× RELATED ஜூன் 29 அமர்நாத் யாத்திரை தொடக்கம்