×

இலங்கை அதிபர் விக்ரமசிங்கே நாளை மறுநாள் டெல்லி வருகை: தமிழ் தேசிய கூட்டணியுடன் இன்று பேச்சுவார்த்தை

கொழும்பு: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அரசு முறை பயணமாக நாளை மறுநாள் இந்தியா வருகிறார். 20ம் தேதி டெல்லி வரும் அவர் 21ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்ற பின் அவரது முதல் அரசு முறை பயணம் இதுவாகும். இந்நிலையில் இந்திய வருகையை முன்னிட்டு அதிபர் விக்ரமசிங்கே வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் உள்ள தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் கூட்டணியான தமிழ் தேசிய கூட்டணியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பிற்பகல் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கடந்த டிசம்பரில் இருந்து தமிழ் சிறுபான்மையினரின் நீண்ட கால அரசியல் சுயாட்சி கோரிக்கை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டணியுடன் அதிபர் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளார்.

The post இலங்கை அதிபர் விக்ரமசிங்கே நாளை மறுநாள் டெல்லி வருகை: தமிழ் தேசிய கூட்டணியுடன் இன்று பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : President Wickremesinghe ,Delhi ,Tamil National Alliance ,Colombo ,President ,Ranil Wickremesinghe ,India ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...