×

பயணி மீது லத்தி தாக்குதல் போதை ஏட்டு சஸ்பெண்ட்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் புதிய பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் இரவு ஒரு பயணி நின்று கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வெளிப்பாளையம் போலீஸ் ஏட்டு கோடீஸ்வரன் (33), அந்த பயணியிடம் ஏன் இங்கு நிற்கிறாய் என கேட்டார். அதற்கு பஸ்சில் செல்வதற்கு பஸ் ஸ்டாண்டில் நிற்காமல் வேறு எங்கு நிற்க முடியும் என கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஏட்டு கோடீஸ்வரன், போலீஸ் கேள்வி கேட்டால் எதிர்த்தா பேசுகிறாய் என கூறி அந்த பயணியை லத்தியால் சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த பயணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த வீடியோ சிறிது நேரத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுபற்றி விசாரித்ததில் போதையில் ஏட்டு கோடீஸ்வரன் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி ஹர்ஷ்சிங் உத்தரவிட்டார்.

The post பயணி மீது லத்தி தாக்குதல் போதை ஏட்டு சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு, தனியார் ஐடிஐ-ல் மாணவர்கள் சேர்க்கை